பொடுதலைகீரை

56.பொடுதலைகீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

பொடுதலைகீரை

பொடுதலைகீரை ஒரு நல்ல மூலிகை கீரையாகும்.தலையில் ஏற்படும பொட்டு பிரட்சனைக்கு அருமருந்து..

இந்த கீரை தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

நீரிழிவு நோய்: நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

இருமல்: இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து  சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

அக்கிப் புண்: உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல்  நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்

பொடுகு: பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

வெள்ளைப்படுதல்: பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

சிறுநீரக நீர்த்தாரைப்புண்: நூறு கிராம் பொடுதலை இலையை அரை டம்பளர் நீரிலிட்டுகாய்ச்சி கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர  சிறுநீரக நீர்த்தாரைப்புண் குணமாகும்.

மற்ற கீரைகள்

இரணகள்ளி
இரணகள்ளி கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான
66.மணலிக்கீரை
மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.நமது முன்னோர்கள் பயன்படுத்தி நாம் மறந்து போன கீரைகளில் இதுவும் ஒன்று 1. மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை
95 - புளியங்கீரை
புளி நமது உணவு முறையில் ஒரு முக்கியமான பொருளாகும். புளியன் பழம் ஒன்றுதான் புளி மரத்தில் கிடைக்கும் பலன் என நாம் என்னுகிறோம். புளி இலையும் சிறந்த

Share

Facebook
Pinterest
WhatsApp