தொய்யக்கீரை/காட்டுக்கீரை/சுண்ணாம்பு கீரை
தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.
உடல் வளர்ச்சிக்கு தேவையான பல சத்துகள் கொண்டுள்ளது கீரை இது. இந்த கீரையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாது சத்துகள் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும்.
இவைஅல்லாமல் தோல் வியாதிகள், வயிற்று புண்கள் என இதன் பலன்கள் நீண்டுகொண்டே போகும்