முடக்கத்தான்

18. முடக்கத்தான்

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

முடக்கத்தான்

முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. முடக்கறுத்தான்பேச்சு வழக்கில் முடக்கத்தான் ஆனது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும். முடக்கத்தான் இலைமற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களைக் கொண்டவை.

முடக்கத்தான் கீரை பயன்கள்

முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம்,பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்,வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

  1. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.
  2. முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
  3. முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  4. முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
  5. முடக்கத்தான் கீரையை வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்கள்சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
  6. மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.
  7. இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
  8. முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.
  9. இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.
  10. முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல்,பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

மற்ற கீரைகள்

76. இலந்தை இலை
முந்தைய காலங்களில் சிறுவர்கள் உண்ணும் சுவையான தீண்பண்டங்களில முக்கியமானது இலந்தை பழம்..இதெல்லாம் 90 ஸ் கிட்ஸ்க்கு என்னவென்றே தெரியாத நிலைதான்…அதன் பழத்தில் எவ்வளவு சத்தோ ,அதேபோல அதன்
பாலக்கீரை
பாலக்கீரை பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும். தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். இந்தப்
அகத்திகீரை
கால்சியம் மிகுதியாக உள்ள கீரை இது.அகம்(உள்ளே)+தீ உடலின் நச்சுக்களை சுத்தப்படுத்தும் என்பதால் அகத்தீ என்றாயிற்று….எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவு. பல மருத்துவக்

Share

Facebook
Pinterest
WhatsApp