7. சிகப்பு தண்டு கொடிபசலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

பசலைக்கீரையில் பல ரகங்கள் உண்டு..குத்துசெடி, கொடிவகை, தரைபசலை..அதிலும் கொடி வகையில் சிகப்பு, பச்சை என இரண்டு ரகங்கள் உள்ளது…சிகப்பு தண்டு கொடிபசலை கீரை சிகப்பு நிறத்தில் தண்டு இலை இதய வடிவில் காணப்படும்…இதை ஒடித்து வைத்தாலேயே நன்கு வளர்ந்து விடும்..விதைகள் மூலமும் வளரும்..விதைகள் சிகப்பு நிறத்தில் மிளகு போல இருக்கும்…இந்த கீரையில் என்னற்ற மருத்துவ குணங்கள் உள்ளது…

கொடி பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.

கொடி பசலைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் பாதாம் பருப்பை ஊறவைத்து ஊலர்த்திப் பொடியாக்கி , பசும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கொடி பசலைக் கீரைச் சாறு  ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால்  குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.

கொடி பசலைக் கீரையுடன் விளக்கெண்ணெய் , மஞ்சள் சேர்த்து வதக்கிக் கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை கரையும்.

கொடி பசலைக் கீரை, கொத்தமல்லி விதை , சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

கொடி பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால்  தீராத தாகமும் தீரும்.

கொடி பசலைக் கீரையை உளுந்து ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்து வந்தால் , உடல் சூடு , வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

மற்ற கீரைகள்

சக்கிரவர்த்தி கீரை
சக்கிரவர்த்தி கீரை சக்கிரவர்த்தி என்னால் அரசன் காப்பவன் என்று பொருள்..உடலின் நோய்களிருந்து காப்பதால் சக்கரவர்த்தி கீரை என்றழைக்கப்படுகிறது. சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம்
4. வெள்ளை பொன்னாங்கன்னி
பொன்னாங்கன்னியில் மூன்று வகை உண்டு…ஒன்று வெள்ளை நிற சிறிய பூக்கள் உடைய வெள்ளை/பச்சை பொன்னாங்கன்னி கீரை, சிகப்பு நிற இலையுடைய சீமை/சிகப்பு பொன்னாங்கன்னி, மற்றும் சிறிய எதிர்
கீழாநெல்லி
கீழாநெல்லி நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை

Share

Facebook
Pinterest
WhatsApp